வயதான வாத்தியாரின் கனவு நிறைவேறுமா? விவசாயம் செய்ய ஆசை இருக்கிறதா?

0

 






குடும்ப வறுமையிலே வீட்டை விட்டு வெகுதூரம் சென்று நன்றாக பட்டம் படித்து பின்பு பல வேலைகளுக்காக முயற்சி செய்தும் கடைசியாக ஆசிரியர் பணி கிடைத்ததால் அதை இறைப்பணிக்கு நிகராக நேசித்து ஆசிரியராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

 பின் திருமணம் பிள்ளைகள் என அவர்களுக்காக உழைத்து, ஓய்வெடுக்க வேண்டிய வயதில் தன் மனைவியையும் இழந்து பென்சன் பணத்தில் வீட்டில்உட்கார்ந்து ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில்,

 நம் எதிர்கால சந்ததிக்காக தனக்கு இருந்த நிலத்தில் மரங்களை நட்டு வைத்து நாம் ஒரு நாள் இல்லை என்றாலும் நம் பேர பிள்ளைகள் இந்த மரத்திலிருந்து பலனை பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் தோட்டத்தை பராமரித்து வருகிறார்.



இந்த நிலையில் தோட்டத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் கிணறு வெட்டுவதற்காக கடன் பெற்று வங்கியில் கடன் பெற்று கிணற்றை வெட்டுகிறார்.

கிணற்றையும் வெட்டி மரங்கள் எல்லாம் நன்றாக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் மகன்கள் எல்லாம் வயசான காலத்தில் உங்களுக்கு இதெல்லாம் தேவையா ரிட்டையர் ஆகி விட்ட பின்பு வீட்டில் பென்ஷன் வாங்கிக்கொண்டு நிம்மதியாக இருக்க வேண்டியதுதானே என்று கேட்கின்றனர் உறவுகள் பிள்ளைகள்.


ஆனாலும் 90 வயதை தாண்டியும் அவரை தோட்டத்தை தேடி ஓட வைப்பது எது?

விவசாயத்தை கைவிட்டு விட்டால் நம் எதிர்கால சந்ததியினர் பெரிய கஷ்டப்படுவார்கள் என்று எதிர்காலத்தில் பிள்ளைகளுக்காக அந்த இடத்தை விற்க மிகவும் விடாமல் மிகவும் போராடி வருகிறார்

கிணறு வெட்டுவதற்காக  வங்கியில் கிணறு வெட்டுவதற்காக வாங்கிய கடனை கட்ட முடியாமலும் இடத்தை விற்க மனம் சம்மதிக்காததால் ஒற்றை ஆளாக தோட்டத்தை சுற்றி வருகிறார்.





தென்னை மரத்தில் பாலை விட்டதை பார்த்தபோது அவள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை

 என் தென்னை மரத்தில் பாலை வந்துவிட்டது இன்னும் கொஞ்ச காலத்தில் குலைகுலையாய் காய்க்கும் அதில் என் பேர குழந்தைகள் எல்லாம் வந்து இளநீர் குடிக்கும் என்ற ஏக்கத்தில் தோட்டத்தையே சுற்றி வருகிறார்.

 இன்றைய சூழ்நிலையில் விவசாயம் பண்ணுவதற்கு அதில் முதலீடு செய்வதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது உடல் உழைப்பும் தேவைப்படுகிறது

 இது எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டுமே விவசாயத்தை நாம் எதிர்காலத் தலைமுறைக்கு கொண்டு சேர்க்க முடியும் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்



இந்த வயதான வாத்தியாருக்கு யாரேனும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் தொடர்பு கொள்ள கொள்ளுங்கள்.

அந்த வயதான ஆசிரியரின் நம்பர்-9791377749

 அந்தத் தோட்டத்தில் சிறு பகுதியை குத்தகைக்கு எடுத்து அந்தத் தோட்டத்தை மண் வளம் மிக்க தோப்பாக மாற்ற இயற்கை ஆர்வலர்கள் தேவைப்படுகிறார்கள் ஆசைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வாழ்க வளமுடன். தொலைபேசி எண் 948643 951 

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)