மூட்டு வலியும் ,மார்டன் கிச்சனும்

0


                     இன்று பெண்கள் பலர் மூட்டு வலி பிரச்சனையால்          அவதிப்படுகிறார்கள்.  
40 வயது கூட நிரம்பாத பெண்கள் மூட்டு வலியால்  அவதிப்படுகிறார்கள் அதற்கு முக்கியமான காரணம்.                                                                     இன்றுள்ள    மாடர்ன் கிச்சன்.        

 முன்பு அம்மாக்கள் காலத்தில் கிச்சனில் அமர்ந்து கொண்டு  சமையல் பண்ணுவார்கள்.   ஆனால் நின்று கொண்டே இன்று சமையல் பண்ண வேண்டிய அவல நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர், அதற்கு மாடர்ன் கிச்சன் என்று சொல்லி நின்று கொண்டே                    எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருக்கிறது. 


    முன் காலத்தில் அம்மா அடுப்பின் முன் அமர்ந்து தோசை சுடுவார்கள்.     நாம் அவர்களை சுற்றி உட்கார்ந்து சாப்பிடுவோம் .ஆனால் இன்று     டேபிளில் அமர்ந்து கொண்டு தோசை சாப்பிடுகிறார்கள். அவர்கள்     டைனிங் டேபிளும் கிச்சனுக்குள் தோசை சுட்டு கொண்டு வந்து                              கொண்டு  வந்து பரிமாறியே கால் மூட்டு தேய்மானம்                                                                          அதிகமாக இருக்கிறது.


    மாடர்ன் கிச்சனில் மிக்ஸி அரைப்பது முதல் கிரைண்டர் அரைப்பது             வரை எல்லாமே டேபிள் ஆக மாறி விட்டது.நின்று கொண்டே வேலை                                             செய்ய வேண்டிய நிர்பந்தம். 

        வீட்டில் தான்  இப்படி என்றால் வேலைபார்க்கும்  இடத்திலும் ஒன்று                 ஒரே இடத்தில் அமர்ந்து வேலை அல்லது நின்று கொண்டே வேலை                     செய்யும் அவல நிலை. இதனால் இரத்த ஓட்டம் சரியாக ஓடாமல்                     மூட்டு வலி வருகிறது   உடல் பருமன் காரணமாகவும் அதிக                                                             பெண்களுக்கு மூட்டுவலி வருகிறது


தவிர்ப்பது எப்படி?

டீ, காபி, கோகோ, சோயா பொருட்கள், ஒயின், பீர், கோலா மற்றும் காற்றோட்டமான பானங்கள் போன்ற பாலிபினால்கள்,  ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதை தவிருங்கள்

உடம்பில் எணணெய் பசையில்லாமல் ,உணவிலும் எண்ணெய் குறைந்தால் எலும்பிகளுக்கிடையே இருக்கும் மூட்டுகளிலும் உயவு எண்ணெய் போன்ற   திரவம் குறைந்து இந்த பிரச்சனை வரும்.
                          குணபடுத்தும் உணவு முறை                                                                     

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலும் 
இந்த பிரச்னை வரும் .இதனை உணவு வகையிலேயே குணப்படுத்தலாம் .

கிராமங்களில் ,தெருக்களில் கிடைக்கும் லஜ்ஜைகெட்ட கீரை என்று அகலமாக வெற்றிலை போல கிடைக்கும் கீரையை சைவ பிரியர்கள் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிடவேண்டும்

அசைவ பிரியர்கள் ஆட்டு ரத்தத்துடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடவேண்டும் .

மீன் குழம்பு ,கருவாட்டுக்குழம்பு சாப்பிடுவதனால் அதில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடவேண்டும்

புதிதாக வடித்த சாதத்தில் உப்பு ,மிளகு ,நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடவேண்டும் .

சற்று அதிக வசதி படைத்தவர்கள் .மாதுளை பழங்கள் ,பேரிட்சை ,அத்திப்பழம் போன்றவையும் ,கருப்பு எள் ,மற்றும் கருப்பு எள் லட்டு தினசரி உணவில் சேர்க்கவேண்டும்

நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, இனிப்பு சுண்ணாம்பு, ஸ்ட்ராபெர்ரி, பெல் பெப்பர்ஸ், தக்காளி, திராட்சைப்பழம், பெர்ரி போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள், ஏனெனில் அவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது

முக்கியமாக ..இரும்பு பாத்திரங்களில் சமைத்த உணவை உண்ணுங்கள்: இது இரும்பு பாத்திரம் உங்கள் உணவை இரும்புடன் பலப்படுத்துகிறது, இது குறைந்த ஹீமோகுளோபின் அளவுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு சக்தியூட்டுகிறது

இதெல்லாம் செய்யமுடியாது ஆனால் மூட்டு வலி குறையணும்னு நினைக்குறவங்க உள்ளூர் எலெக்ட்ரிக்கல் கடைகளிலும், இரும்புக்கடைகளிலும் ,ஈபி எலெக்ட்ரிசியன்களிடமும் சொல்லி வைத்தால் ட்ரான்ஸபார்மெர் ஆயில் கிடைக்கும் .அதை வாங்கி தேய்த்து வெந்நீர் வைத்து மூட்டில் ஊற்றினால் வலி குறையும் .வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)