காதல் , கல்யாணம் பண்ணலாமா ? வேண்டாமா?

0
              காதல்  ,    கல்யாணம் 

               உன் குணத்தோடு அவள் குணமும்  ஓத்துப் போனால்
              அதைப் பண்ணிக்கொள்;

               ஊராருக்கு அழகாய் தெரியாமல்
               உன் கண்களுக்கு அழகாய் தெரிவாள் 
               அவளை ஏற்றுக் கொள்;

              உன் லட்சியத்தை அவள் நேசிக்க
              அவள் லட்சியத்தை நீ நேசிக்க நினைத்தால்
               அதை நீ ஏற்றுக் கொள்;

              உன் குடும்பமும்,உன் சமுதாயமும்
               மகிழ்ச்சியாயிருக்குமா  -என்று
              ஓரே ஓரு முறை யோசித்து-நீ
              திருமணம் முடித்துக் கொள்.



               
               உன் குணத்தோடு அவள் குணமும் ஓத்துப்போகவில்லை
              என்றால் அதை பண்ணாதே;

              ஊருக்கு அழகாய் தெரிந்தாலும்
               உனக்கு அழகாய் தோன்றவில்லை
               என்றால் அதை பண்ணாதே;

               உன் லட்சியம் வேறு
             அவள் லட்சியம் வேறு ஒன்று
              என்றால் அதை பண்ணாதே;
           
              உன் குடும்பமும் உன் சமுதாயமும்
              மகிழ்ச்சியாயிருக்குமா-என்று
               ஒரே ஒரு முறை யோசி- நீ
               முடிவெடுத்துக் கொள்..........

   
             

  

             

கருத்துரையிடுக

0கருத்துகள்

படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.உங்கள் நம்பிக்கையால் வளர்கிறேன்,வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக (0)